#பட்டாம்பூச்சிநூல்அறிமுகம்
அன்பு பட்டாம்பூச்சி உறவுகளுக்கு வணக்கம் நமது பட்டாம்பூச்சி தளத்தின் எழுத்துப் பயணத்தில் தொடர்ந்து பதிவேற்றி வரும் நம் சககால படைப்பாளிகளின் நூல் குறித்த அறிமுகத்தில் ...
இன்று அன்பிற்கினிய எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் சமீபத்தில் வெளிவந்த பாட்டையா சிறுகதை தொகுப்பு குறித்து அழகிய பார்வையில் அழகிய வாசிப்பில் கவிஞரும் ஓவியருமான தயானி அவர்கள் சிறப்பாக பதிவேற்றம் செய்கிறார்....
வாழ்த்துக்களும் அன்பும்......
நூல் : பாட்டையா
********************
நூலாசிரியர்: பொள்ளாச்சி அபி அவர்கள்.
*******************"
ஆறு சிறுகதைகள்
அடங்கிய இந்நூல்... மிகவும்
சிறப்பானது.
வாழ்வியலின்
மகிழ்வும்
வலியும்
நம்மை கடந்து செல்லும் மாந்தரின் வாழ்வியலை
கூர்நோக்கிய
அறிவு...தன்
செவ்வியலை
எழுத்தாக்கி
ஆறு நட்சத்திரங்களை நம் கைகளில் மின்ன வைத்திருக்கும்
ஒளிப் பூக்களை
படைத்த...
பொள்ளாச்சி அபி அவர்களை
பாராட்ட வார்த்தைகள் இல்லை.
கதை சொல்லும்
பாங்கில்-எது
எடுத்துக்கொள்ள
வேண்டுமோ
அதையே
கதையின்
முக்கிய சாரமாக
அது... மானுட நீதி.
அவரின் கதைகளில் உலவும் மாந்தர்கள்...நுட்பமான மானுட
தீபங்கள்.அது காற்றில் அசைந்தாடும்
போதும்
மனது அமைதிபெறும்.
இருளையும் விரட்டும்.
மூடநம்பிக்கையை கொளுத்தும் தீப்பந்தத்தின்
தொடக்கப் புள்ளியாக
மின்னும் கதைகள் -அபி அவர்களின்....
நுட்பமான பார்வையை
வாழ்வியலின் மீதும் தீராத நம்பிக்கையையும்... முரண்களின் எதிர்ப்பில் நீதியை கைவிடாத மனமும் சுடர்விடுகிறது.
இந்த நூலின் தலைப்பே... ஆறடி உயரமும் முண்டாசுபனியனும், தார்பாய்ச்சிய வேட்டியும் தும்பைப்பூ தாடியும் மீசையும் அகலமான மார்பும், நீளமான கைகளும் கொண்ட , எழுபத்தாறு வயது, உழைப்பாளி
பாட்டையா தான்.
முத்து வீரன் ஒரு இளைய தலைமுறை ஆண் மகன்.
ஒரே காட்சியில்
ஒரே நேரத்தில்
வாழ்வின் மேடையில்.. சந்தித்தாலும்
பாட்டையாவின்
நடனமும், நுட்பமும், முத்து வீரனுக்கு பொறாமையும்
எரிச்சலையும் ஏற்படுத்தினாலும் தன் காதலி செல்விக்காக
பொறுமை காக்கிறான்.
பெரியவர் பாட்டையாவின் ஜமாப்பு செட்டு ஆட்டத்திற்கு
எல்லோருமே அடிமை. அத்தனை நுட்பமும் நளினமும் அவரை தலைமையாக ஏற்கத்துணிகிறது .இசைக்கலைஞர்களின் குழுவுக்கு.
நடுநாயகமாக....எல்லா இசைக் கருவிகளையும் வரிசைப்படுத்தியுள்ள பேரழகு.
எளிய மானுடவாழ்வின் இசை தான்
எல்லாவற்றிற்கும் ஆதாரம்.
பறை என்பது பேசும்.
அந்த மொழியை
உரக்கப் பேசு.
முதலில் உனக்கு அந்த மொழி புரியாவிட்டால்
அதை... மக்களுக்கு
எப்படி மொழிபெயர்ப்பாய்? செய்தியை ... என்பது
பாட்டையாவின் கேள்வி.
அவமானம்தான்
ஒருவனை செதுக்கும் என்பதற்கு முத்து வீரன் ஒரு உதாரணம்.
கனமான காற்சதங்கை-வெள்ளை ஈரிதழ் துண்டு என காட்சிபடுத்தும்போது- பாட்டையா கெம்பீரம்.முத்து வீரனும் செல்வியை
கை பிடித்தானா
என நீங்கள்
கதையை படித்து அறிந்தால்
சுவராஸ்யம்.
சஹாபி - போன்ற கதையை எழுத துணிவு அவசியம். அது
அபி அவர்களின்
எழுத்துசாதித்துவிட்டது. நாம்
அறியாத ஒரு விடயம் - அதுவும்
முகமதிய வாழ்வியல் - அவர் நுட்பமாக
நகர்த்தும் கதை இந்த புத்தகத்தின்
மகுடம்.
பாத்திமா என்ற தாய் - தன்
நேர்மையான கேள்வியால்
ஜமாத்து மக்களை வாயடைக்க வைக்கிறாள்.
தன் மருமகளை
திருமணம் செய்ய
வழக்கமாக எழுதும்
500 - 50,000
என எழுதச் சொல்லும் அவளின் கணவனின் சேமிப்பாக அதை தன் வீட்டிற்கு வரும் மருமகளுக்கு வைப்புதொகையாக அறிவிக்கத் தயங்கும்
பெரிய தலைகளுக்கு
மஹர் (வரதட்சணை வாங்குவது குற்றம் என அல்லாவின் வார்த்தையை) முன்வைத்து
5 பவுன் - ஐய்யாயிரம்
10 - பவுன் - பத்தாயிரம் என வாங்கும் திருமண பந்தங்கள் - பதிவு செய்வது வழக்கமாக - 500 தான்.
அதை உடைக்கும் பெண்ணின் நீதியை
ஏற்கத்தயங்கும்
மனிதர்கள்.
தன் தாய் அதிகமாக பேசியே பார்க்காத
மகன் - மணமகன் முகமது அலி சாதாரண பழைய இரும்பு சேகரிப்பு-லோடு பிடித்துக் கொடுக்கும் வேலை. வருமானம் நிரந்தரம் கிடையாது.
தன் மருமகள்
இறை பக்தியில்
நிறைந்து இருப்பதால்
அவளையே தன் மருமகளாக்க துணிகிறாள் பாத்திமா.
தன் குழந்தைக்கு
தன் மாமியார்
பெயரையே
சூட்டத் துணியும் அவள் சொல்லும் காரணம்,
புதிய தலைப்பு கதையின் தலைப்பாக
மிளிருகிறது,
நவரத்தினக்கல்லாக.
மூன்றாவது சிறுகதை
ஒப்பனைக்காரன்.
இந்த உலகமே
வெறுத்தாலும்
தாய் வெறுத்து
ஒரு பார்வை
பார்வை பார்த்துவிட்டால்
ஒரு மனம்
என்ன விலை தந்தாலும்
அதைஏற்காது.
தன் உயிரையே
பரிசாகத் தரும்
அந்த உள்ளம்
ராதாகிருஷ்ணன்.- எனும்
அன்புக்கு ஏங்கிய உள்ளம்.
பொன்னரளிக்காய்களோடு
முடியும் ஓசைகளும்...
வாழ்வும்.
அர்த்தநாரீஸ்வரராக அரிதாரம்
பூசும் உயர்ந்த
இடத்தில் இருக்கும் பெரிய மனிதனுக்கும்
காமம் எனும் பாம்பை
தலைவிரித்தாட விட்டு
அல்பமாய் அலையும்
அற்ப மனிதர்களால்
தான் வாழ்வு
தன் கடைசித் துளியை
தேடுகிறது.
இறைவனேயானாலும்...
தொட்டுப்பார்க்கும் புத்தி மனிதன் ஒரு சல்லிப் பயல் என்பதை
உலகம் நிரூபிக்கும்
கணம்
கொடூரமானவை. இந்த உலகத்தில் நடமாடும் ஒப்பனைக்காரர்களின் முகமூடிகளில்
ஒளிந்திருக்கும்
விஷம் ஒரு துளிதான்.அது
பொன்னரளிக்காய்களை விட
கசப்பானது.
டி.எம்.எஸ் குரலில் பாடினால் சுசீலாவின் குரல்
அல்லவா வருகிறது.- என்பவனின் வாழ்வியல் துயரம் என்பது
நாம் அறியாதது.
ஒருவரின் மரணத்தில்தான்
தெய்வங்கள்
உயிர்த்தெழுகின்றன.
மறந்துவிடுவதற்காகவே
இறைவனை
பற்றிக்கொள்ளும் இலாவகம்
ஒரு மாய உறவின் உலகம். பொய்மைகளை
மண் கொண்டு
மூடாது
மூடர்கள்... அதையும்
இறைவனாக்கி
மண்மூடும் இலாவகம்
மானுட வேஷம்.
கண்ணீரை வரவழைத்த கதையிது.
மகிழம்பூ கதையில்
வரும் கணேசன்
நம் நண்பனாகவும்
இருக்கலாம். கமலம் பைனான்ஸ்
அழைப்புகள்
ஒரு மனிதனை
என்ன பாடுபடுத்துகிறது. ஒரு மரணம்
முற்றுபெறும் தருணம்
கடன்கள்
உயிர்த்தெழுகின்ன்றன. இது சத்தியமான
வார்த்தை. பொள்ளாச்சி அபி அவர்கள்
எழுத்து கற்சிற்பமாக
எழுந்து நிற்கிறது. மானுட உலகம்
எதையும் கண்டுகொள்ளாமல் கடந்துவிட
பழக்கப்படுத்தப்படுகிறது - பிரேமா - ரவி - கணேசன் நட்பில்... திட்டுக்கள்
வாங்கினாலும்
உதவுவதை நிறுத்த முடியாத
வெள்ளந்தி தனமே தன்னியல்பு
மாறாத கணேசன்.
நட்பு - கைவிடாத
நட்பு - புரிதல் -
அற்புதம்.
குடும்பம் நிராகரிக்கும்
நிமிடம் ,நட்பு
மகிழம்பூவாக
மலர்ந்து மணம் வீசுகிறது.
அற்புதமான திருப்பம் நிறைந்த கதை.
நெருப்புக்கு திசையில்லை-.அருமையான அடுத்த சிறுகதை தலைப்பு.
அற்புதமான இளைய தலைமுறையின்
மனநிலையை
மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார் அபி
அவர்கள்.
பெண்கள் தவறுகளை
மன்னித்துவிடுவார்கள்.
பெண்மை எப்போதும்
கூட்டைவிட்டு பறந்த பறவை
நன்றாக இருக்கிறதா?- என்ற கவலை யோடு
நலம் விசாரிக்கும்.
ஆண் அப்படியல்ல.
குடும்ப கௌரவம் தலைகுனிய வைத்த காதலை
ஒருபோதும்
ஏற்பதில்லை. இப்போதும்
இது சாதீய கட்டமைப்பை மீறும்
இளம்பெண்
மீண்டும் தாய் வீட்டுக்கு வந்தபோதும்
பழைய நினைவுகளைத் தேடியே வருகிறாள்.
தன் வாப்பா அந்த கவலையில் இறந்துவிட்டதாக கவலைப்படும் ரஹீம் ,துவா பிள்ளைகளே செய்ய வேண்டும் எனும் வரை முறையில் உள்ளே நுழையும் தங்கை_யாஸ்மீன்-ஹஜ்ரத் வர
தாமதமானதும்
அவளே
கணீர் குரலில்
துவா - செய்வதை
வாயடைத்து பார்க்கும் ரஹீம் அண்ணன்-காதலுக்கு திசையில்லை-
நெருப்புக்கும்
திசையில்லை என்பதை
புரிந்திருப்பான்.
வினைப் பயன்- கடைசி சிறுகதை.
மனதை என்னவோ
செய்த அழுத்தமான கதை.
ஊருக்கு
ஒதுக்கு புறம்
ஒதுக்கிவைக்கப்பட்ட குடிசைகள்
எரிவதும்
காலில் விழும்படிக்காத ஜனம் - அதையும் மீறி
சென்னை வந்து
படித்து விட்ட
இளைஞன்
சாதீய கட்டமைப்பில்
எவ்வாறு நிர்பந்திகப்படுகிறான்.
கோர்ட் - போலீஸ்
எல்லாம்
ஊர் கட்டுப்பாடு
க்கு பிறகுதான். பெரிய மனிதர்கள்
தங்கள் அதிகாரத் தொனியையும்
மழிக்க வேண்டிய காலம்
வந்துவிட்டது. செவனோ க்ளாக் பிளேடால் அல்ல. அறிவால்.
எறும்பும் யானையும்
இந்த உலகத்தில் வாழ உரிமையுண்டு.
உருவம் பொருட்டல்ல.
செயல்களால் தான் உயரவேண்டும்.
பட்டங்களால்
தோற்றத்தால் அல்ல.
சமமாக தாகம் தீர்க்கும் குணத்தால்.
ஊனமான எண்ணங்களை சுமக்கும் ஆஜானுபாகுவான தோற்றம்தான்
உண்மையான ஊனம்..
உடல் ஊனம்
இதயத்தை
ஊனமாக்காது. கருப்பசாமியே
கடைசி தலைமுறை....ஊர் கட்டுப்பாட்டில். குழந்தை
அவினாஷ்...
இக்கதையின்
முடிச்சை அழகாக அவிழ்த்துவிடும்
தளிர் கைகள்.
வாழ்க அறிவியலின் முன்னேற்பாடுகள்.
ஒழியட்டும்
ஏற்றத்தாழ்வுகள். வாழ்க சமத்துவம்
வாழட்டும்
மானுட நீதி. -
#############
வெளியீடு: ஒரு துளிக்கவிதை....
############
- பட்டாம்பூச்சி குழுமம்
பட்டாம்பூச்சி