21 டிசம்பர் 2011

பிரிவின் எல்லைகள்..!

மதம் காக்க போர்,
மிளகுக்காக போர்,
தங்கத்திற்காக போர்,
எண்ணெய்க்காக போர்,
இப்போது தண்ணீருக்காகவும் போர்.!
இனி காற்றுக்காகவும் நடக்கலாம்.!

ஆரியன்-திராவிடன்
வடஇந்தியன்-தென் இந்தியன்
தமிழன்-கன்னடன்
தமிழகம்-கேரளம்
குறுகிக்கொண்டே போகும்
எல்லைகள்,காட்டுவதென்னவோ
பிரிவின் அகலங்களை..!

மதம்-இனம்,மொழி-நிறம்
நாடு-எல்லை,
அரசியல்-பொருளாதாரம்
எல்லாம் கடந்து
ஒரே வானம்,ஒரே பூமி
அனைவரும் மனிதர்களே..
எப்போது வரும்
அந்தக்காலம்..?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக