21 டிசம்பர் 2011

அவள் கேட்கிறாள்.!

காதல்,காதலி,முத்தம்
தென்றல்,மழை,நிலா
சுகம்,மலர்,இதழ்
உதடு,பனி,நேசம்
சிப்பி,முத்து,அலை..,
உனது கவிதையில்
இடம்பெற,
கிடைத்தது இவ்வளவுதானா..?

வியர்வை,உழைப்பு
அத்தக்கூலி,கொத்தடிமை,
குழந்தைத் தொழிலாளர்,
வரி,வட்டி.,கந்துவட்டி
விலைவாசி,தீண்டாமை,
அரசியல்,ஊழல்
இனம்,மொழி,நாடு
எதிரி,பகைமை..
இன்னும் எத்தனையெத்தனை..!

இதனையும் கவிதையாய்
படைக்க உனக்கு மனசில்லையா..?
இல்லை திறமையில்லையா..?

உன்னால் முடியவில்லையெனில்
பிறகு யாரால் முடியும்..?
தமிழன்னை கேட்கிறாள்..
பதிலிருந்தால் சொல்லுங்களேன்

- பொள்ளாச்சி அபி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக