இதற்கு முன்பு நான்
கடவுளாயிருந்தேன்.!
சூன்யவெளியில்
நிகழ்வதனைத்தும்
சூன்யமாகவே இருந்தது.
சூரியனைப் படைத்தேன்.
கோள்களைப் படைத்தேன்
அதன் இயக்கங்களையும்
படைத்தேன்!
பலகோடி ஆண்டுகள்
கழிந்தது.!
ஓரறிவுமுதல் ஐந்தறிவு வரை
உயிர்களைப் படைத்தேன்..!
உள்ளத்தில் அப்போதும்
முழுமையில்லை..!
ஆறறிவுள்ள மனிதரைப்
படைத்தேன்-அவர்களுக்கு
குடும்பம் என்ற அமைப்பையும்
படைத்தேன்..!
உணவுக்கான உழைப்பைக்
கொண்டுவிடப் பணித்தேன்.
அவனோ..செல்வத்தைப்
படைத்துக் கொண்டான்.
செல்வத்தைப் பாதுகாக்கவென
குழு,கணம்,ஆட்சி,சாதி,
எனப் படைத்துக் கொண்டான்.
பின்னர் அவனின் வரலாறுகள்
அனைத்தும் ரத்தம் சிந்தும்
போர்களாகவே மாறிப்போயிற்று.
அன்பை,அகிம்சையை
போதிக்கச் சொன்ன
என்கைகளிலும்-அவன்
ஆயதங்களைத் திணித்தான்.!
இன்றுவரை அதுவே
தொடர்கிறது..!
இதற்கு முன்புவரை நான்
கடவுளாக இருந்தேன்..!
ஆனால் இப்போது..
நான் கடவுளாக இல்லை
மனிதனின் வார்த்தையிலேயே
சொல்வதெனில்
NON கடவுளாகிவிட்டேன்..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக