12 ஜனவரி 2012

நான் கடவுளாயிருந்தேன்..!

இதற்கு முன்பு நான்
கடவுளாயிருந்தேன்.!

சூன்யவெளியில்
நிகழ்வதனைத்தும்
சூன்யமாகவே இருந்தது.
சூரியனைப் படைத்தேன்.
கோள்களைப் படைத்தேன்
அதன் இயக்கங்களையும்
படைத்தேன்!
பலகோடி ஆண்டுகள்
கழிந்தது.!

ஓரறிவுமுதல் ஐந்தறிவு வரை
உயிர்களைப் படைத்தேன்..!
உள்ளத்தில் அப்போதும்
முழுமையில்லை..!

ஆறறிவுள்ள மனிதரைப்
படைத்தேன்-அவர்களுக்கு
குடும்பம் என்ற அமைப்பையும்
படைத்தேன்..!

உணவுக்கான உழைப்பைக்
கொண்டுவிடப் பணித்தேன்.
அவனோ..செல்வத்தைப்
படைத்துக் கொண்டான்.

செல்வத்தைப் பாதுகாக்கவென
குழு,கணம்,ஆட்சி,சாதி,
எனப் படைத்துக் கொண்டான்.

பின்னர் அவனின் வரலாறுகள்
அனைத்தும் ரத்தம் சிந்தும்
போர்களாகவே மாறிப்போயிற்று.
அன்பை,அகிம்சையை
போதிக்கச் சொன்ன
என்கைகளிலும்-அவன்
ஆயதங்களைத் திணித்தான்.!

இன்றுவரை அதுவே
தொடர்கிறது..!

இதற்கு முன்புவரை நான்
கடவுளாக இருந்தேன்..!

ஆனால் இப்போது..
நான் கடவுளாக இல்லை
மனிதனின் வார்த்தையிலேயே
சொல்வதெனில்
NON கடவுளாகிவிட்டேன்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக