நடக்கவும்,பேசவும்
பெற்றோர் கற்றுத்தந்தபின்
தொடரும் வாழ்க்கை..
வாழும் வகையறிய
மற்றவை கற்க..
கற்றுக்கொடுப்பார் யாருமில்லை..
பின்...
வாழ்க்கை எனும் சூத்திரம்
கற்றுக்கொடுத்து வரப்போவதில்லை
வாழ்பவர்களே பாடம்
அனுபவங்களே குறிப்புகள்.
இதில் கற்பவை கற்கவும்,
அல்லது வெறுக்கவும்
ஆயிரமுண்டு..
அதுவே உனக்குத் தேர்வு..
வரலாற்றைக் கடந்து-நீ
வரலாறு படைத்துவிட்டால்
அதுவே உனது வெற்றி..!
----------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக