02 ஜனவரி 2012

அவன்,அவள்,அது..!

தனது தூக்கத்தை கலைக்கமாட்டானா..என்ற ஏக்கத்தில் அவள்.அவளது தூக்கம் கலைந்துவிடுமே.., என்று அவன்..,நாட்கள் ஓடுகின்றன.

ஓரே வீட்டிலிருந்தாலும்,ஒவ்வொரு இரவும்,அவர்கள் நிலை இப்படியே தொடர்ந்தது.

ஒரு ஆவேசத்தில் தொடுத்த வழக்கிற்காக. கோர்ட்டிலிருந்து விவாகரத்து என்று தீர்ப்பு வரும்வரை..!.


அவ்வளவுதான் கதை..,இதைப்படிக்கும் உங்களுக்கு நேரமிருந்தால்.கடைசி வரியின் தொடர்ச்சியாக,மீண்டும் முதல் வரியிலிருந்து படித்துப்பாருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக