16 ஜனவரி 2012

நீ இல்லாவிடில்..!








மரம் எனும் பெண்
மண்ணுக்கு அணிகலன்

விண்ணிலிருக்கும் மாசுகளை
விரட்டிவிடும் காவலன்

மழையைக் கொண்டுவரும்
மாபெரும் மந்திரவாதி.

மின்னிணைப்பு தேவைப்படாத
இராட்ஷச விசிறி

மண்அரிப்பை தவிர்த்திடும்
மாயநூற் கண்டு.

அமிலவாயுவை உள்வாங்கி
உயிர்தரும் மந்திரக்கோல்.

மூச்சிருக்கும்வரை மரத்தை
நினைக்க வேண்டும்.

இதில்லாவிடில் மூச்சிருக்குமா..?
யோசிக்க வேண்டும்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக