மலையளவு குப்பைகளுக்குள்
தேடுவதென்ன குழந்தைகளே..?
அரசியல்வாதிகள் கொடுத்த
வாக்குறுதிகளையா.?
கட்டாயக் கல்வி எனும்
சட்டங்களையா..?
தேகம் வலுப்பெறவுதவும்
சத்தான உணவுகளையா.?
இளமையில் மரணிக்கும்
நோயிலிருந்து விடுதலையா.?
எப்படியும் வாழந்துவிடலாமெனும்
எதிர்காலத்தையா.?
மறுஜென்மம் அயல்நாட்டிலாவெனும்
தலைவிதியையா.?
அல்லது
மானுடம் தொலைத்த
மனிதநேயத்தையா.?
ஏதோ ஒன்றைத் தேடினோம்
எதுவோ ஒன்று கிடைத்ததென்று மட்டும்
சொல்லிவிடாதீர்கள் குழந்தைகளே
அதுவும் லாபம்தான் என்று
குப்பைபொறுக்குவதையும்
தேசியத்தொழிலாக மாற்றுவதற்கு
வெட்கமேயில்லாத அரசியல்வாதிகள்
இங்கு காத்துக்கொண்டிருக்கிறார்கள்.!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக