கல்லால் செய்த சிலைகள் கூட
வேளைக்கு உண்ணுதடா..!
சிலைகள் செய்த மனிதனின்
வயிற்றில் அமிலம் கொல்லுதடா..!
முன்னர் எடுத்த ஜென்மப் பலனே
இந்தத் துன்பமடா..,
என்றாலெம்மைத் துன்பப் படுத்துவதில்
உனக்கென்ன இன்பமடா..?
மற்றவர் துன்பம் பார்த்து ரசிப்பவன்
மனிதனே இல்லையடா.!
அதனினுமுயர்ந்த கடவுள் என்றால்
எனக்கு வேண்டாமடா.!
நாங்கள் ஒருநாள் உன்னைதண்டிக்கும்
காலம் வருமடா.!
நாங்களமர்ந்த இடத்திலுன்னை இருத்தி
வைப்போம் உண்மையடா.!
பழிக்குப்பழியென பொங்கும் உணர்வில்
சாபம் இல்லையடா..இது
காலம் சொல்லும் சேதியான
தீர்க்க தரிசனமடா..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக