01 ஜூன் 2012

எப்போது வருவாய்.?

தேவகுமாரன் முதல்
மனுஷ்ய குமாரி வரை..
மனிதனின் பாவக்குப்பைகளை
யாரோ சிலர் இவர்போல்
சுமப்பது மட்டும்
இன்னும் தீரவில்லை.
இனி தீர்வும் இல்லையோ.?

மனித உள்ளங்கள் சுத்தமானால்
மலையளவு குப்பைகளும்
மாய்ந்து போகுமே..!
மானிடா கேள்..
உனது பாவங்கள்
கோபங்கள்,ஆசைகள்
வக்கிரங்கள் என
எல்லா அழுக்குகளையும்
அடுத்தவர் சுமக்கவே விட்டுப்போகிறாய்.
அடுத்தவருக்காக அதனைச் சுமக்க
நீ முன்வருவது எந்நாளோ..,
அன்றே மாயும் அனைத்தும்
இவ்வுலகைவிட்டு.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக