வாழ்க்கையில் வந்துபோகும்
அனைவருக்கும் நிறமுண்டு.
அம்மா பசுமை அப்பா சிவப்பு
இரண்டும் கலந்த குடும்பம் ஊதா
நன்றும்தீPதும் கலந்திருக்கும் காதல் நீலம்
உறவுகளாய் அமைவது எப்போதும்
மங்கலம் சொல்லும் மஞ்சள்
சிவப்பா மஞ்சளா எனத்தெரியாத
வண்ணம் காட்டும் ஆரஞ்ச் மனைவி
ஆனால்..அத்தனைகுணத்தையும்
தனக்குள் அடக்கியிருக்கும்
நட்பு மட்டுமே வானவில்
வாழ்க்கையில் வந்துபோகும்
அனைவருக்கும் நிறமுண்டு
நிறங்கள் எப்போதும்
தொடராவிடினும்
வானவில் என்றும் உடனிருக்கும்..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக