01 ஜூன் 2012

என்னா நீ செய்யப்போறே.?

எங்க வேதனை
உனக்குப் புரியுமா.?
எடுத்துச் சொன்னாக்கா
எல்லாம் தெரியுமா.?


மீசைமுளைச்ச பருவத்திலிருந்து
தாடி வெச்ச தாகூர்போலவே
மாசக்கணக்கிலே திரிகின்றோம்.!
உழைச்ச காசுலே செரைக்கவேண்டியே
வெளியூர் போகற நெலமை தெரியுமா.?

கண்ணாடி அலமாரிலே
கண்ணைப் புடுங்குற
செருப்பு இருக்குது..
அதைவாங்கிப் போட
வக்கிருந்தாலும்
வீதியில்போட்டு நடக்கமுடியாத
விதியும் இருக்குது உனக்குத் தெரியுமா.?

சொதந்திரம் வாங்கி
ஆனது பல ஆண்டு..
அது இன்னும் வரலையேன்னு
ஏங்கித்தவிக்கிற பெருசுக
எல்லாம் எங்க ஊரிலே
இருக்குதென்பது உனக்குத் தெரியுமா.?

கார்ப்ரேட் கம்பெனி சம்பளம் வாங்குற..
நீ காரும் பைக்கும் ஓட்டிப்போறே..
உன்னோட தேவை எங்கோ முடியுது.
என்னோட பொழப்பெல்லாம்
எங்கே உனக்குப் புரியுது.?

நீ நல்லாப் படிச்சே
நல்லவேலைக்குப் போறே..
உன்னோட சொந்தம்
நாங்களும் முன்னேற
என்னா நீ செய்யப்போறே.?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக