01 ஜூன் 2012

போதைகளில்லாத உலகம்.!

கசடனுக்கு மதுவில்..
கவிஞனுக்கு புகழில்..
அரசியல்வாதிக்கு பதவியில்..
மனைவியை அடிமைப்படுத்துவதில்
கணவணைக் கொடுமைப்படுத்துவதில்
போதை...!

அது
எல்லோருக்கும் ஏதோவொன்றில்
எப்போதும் மயங்கிக் கிடக்க
தேவைப் படுகிறது..!

போதையில்
பேசுவதும்,சிந்திப்பதும்
நிந்திப்பதும் தண்டிப்பதும்
நியாயம் வழங்குவதும்கூட
மானுட வழக்கமாய்
மாறிப்போனது..!

போதைகளில்லாத உலகம்
எங்கேனும் இருக்கிறதா.?
தேடலின் முடிவில் கண்டேன்
இன்னும் மனிதனாக வளராத
பேதையாகவே உள்ள
ஒரு குழந்தையின் சிரிப்பில்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக