எதிர்கால வாழ்க்கைக்காக
ஏங்கி ஏங்கி..
வாழ்வின் எல்லைகளையும்
வாழ்விடங்களின் எல்லைகளையும்
விட்டு நீங்கி..அல்ல நீக்கப்பட்டு
குப்பைமேடுகளின் ஒருபகுதியாக
குழந்தைகள் மாறிநிற்பதும்
இங்கு சாதாரணம்.!
முப்பத்திரண்டு ரத்தினங்கள்
பதித்த கிரீடங்களை
தலையில் தாங்கும்
முற்றும்துறந்த முனிவர்கள்..
கோடிகள் கொடுத்து
பதவிகள் வாங்குவதும்
இங்கு சாதாரணம்..!
முற்றும் துறந்தவனுக்கு
எல்லாம் இருக்கிறது.!
எல்லாம் வேண்டுபவர்க்கு
எதுவும் இல்லாதிருக்கிறது.!
இந்தியாவில் மட்டுமே
வேற்றுமையிலும் ஒற்றுமையென
இறந்தகாலச் சரித்திரம் எழுதியவர்களே..!
இந்த நிகழ்காலத்தை எதுவாய் எழுதுவீர்கள்.?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக