02 ஏப்ரல் 2012

பிறையாய் தெரிவதால்..!

பிறையாய் தெரிவதால்
நிலவில் குறையிருக்காது.!
மனதில் மெய்யில்லாவிடில்
எழுத்தில் சத்தியம் மிளிராது..

கயமை மிக்க மனதில்
கவிதை பிறக்காது..!
காலத்தை கிரகிக்காமல்
சரித்திரம் பிறக்காது.!

நீ போகும் பாதையில்
பதிந்துகிடக்கும் முட்களை
பரிசுத்தமாக்கிவிட்டுப்போ..
பின்வருபவர்கள் உன்னைத்
தொடர்கிறார்களாவென பார்க்காதே..!

கனியை உண்பவர்கள் குறித்த
கணக்கெதெற்கு.?
உனது பணியாய்
மரத்தை நட்டுவிட்டுப்போ.

உனதுதேவை எங்கோ
ஒரு இடத்தில் இருக்கிறது.
முடங்கிவிட நீ சாக்கடையல்ல,
காட்டாற்று வெள்ளம்.
இணைந்து வருவதை நீ
உருட்டிக் கொண்டு போ..
எதிர்ப்பதையும்..சேர்த்து.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக