கடையில் வாங்கினாலும்
கிடைக்காது..!
எடையில் நிறுத்தினாலும்
அளவிடமுடியாது..!
உடையின் பகட்டில் அது
விளையாது..!
இடையைக் கண்டும் அது
மயங்காது..!
மடையை உடைத்துப்
பொங்கும் அது..!
நினைக்கும்போதே மயக்கம்
தரும் மது.!
படையை நிறுத்தினாலும்
பயக்காது..
தடையே விதித்தாலும்
செழிக்கும் அது..!
அதனை
நீ காதலென்பாய்..நான்
கவிதை என்பேன்.!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக