02 ஏப்ரல் 2012

காட்டுப்பூ.!

கன்னியர் சூட,தெய்வக்
கருவறை சூட,
விழாநாயகன் சூட,
விண்ணேற தரையில்
வீழ்ந்தவனும் சூட,
மங்கல மங்கை சூட,
மலர்கிறது ஆயிரம் பூ

பிறப்பு முதல் இறப்பு வரை
மனிதனோடு இணைந்ததினால்
மதிப்பைத் தேடிக்கிடக்கிறது
சிலபோது அவர் தலையிலும்
மற்றபோது அவர் காலிலும்

ஆனால்,
யார் பறித்தாலென்ன.?
பறிக்காவிட்டாலென்ன.?
மதிப்பு தந்தால் என்ன.?
மறுத்தால் என்ன.?.

யாருக்காகவும் காத்திருக்காமல்
மலர்வதென் கடமையென
மணக்கிறது ஆயிரம் பூ.
வண்ண வண்ணமாய்
வனப்புக் காட்டும் காட்டுப்பூ.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக