உனக்கான கவிதையாய்
ஒன்றை எழுதிவிட முடியுமென்று
எப்போதும் முயற்சிக்கிறேன்..!
இதுவரை எழுதியதெல்லாம்
உனக்கான கவிதையென்றே
தொடங்கியும் இருக்கிறேன்..!
எழுதியதையெல்லாம் திரும்ப
வாசிக்கும்போது..இது
உனக்கானது அல்ல
என்றே நான் தீர்மானிக்கிறேன்..!
எப்போதுதான்..
உனக்கான கவிதையிதுவென்று
எழுதப்போகிறேன்..?
ஆசையில் துடிக்கும் மனம்.
அது மட்டும்
நடந்துவிடவே கூடாதென
இன்னொருபுறம்
எச்சரிக்கையும் விடுக்கிறது.
காரணம்..,
உனக்காக எழுதப்பட்ட
கவிதையென ஒன்று
நிலைத்துவிடுமானால்..,
பின்னர்
கவிஞர்களுக்கென்ன வேலை..?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக