05 ஏப்ரல் 2012
மனிதா..நீ
மனிதா..நீ
பிறந்தபோது பெற்றோருக்கு
மகிழ்ச்சியளித்தாய்..
வளர்ந்தபோது சொந்தங்களுக்கு
உறவளித்தாய்..
கற்றபோது நண்பர்களுக்கு
அன்பளித்தாய்..
மணந்தபோது மனைவிக்கு
வாழ்வளித்தாய்..
உன்பி;ள்ளை மதிக்கும்படி
தந்தையானாய்..
உனது குடும்பம்
உனது உறவுகள்
உனது நண்பர்கள்
என
ஒரு வட்டத்திற்குள்
உனது வாழ்க்கை..
இதுமட்டுமா வாழ்க்கை..?.
நீ கேட்காமலே பிறந்ததும்
அழைக்காமலே இறப்பதும்
நிச்சயிக்கப்பட்டவை..!
இதுவரை நீ மனிதனாக
இருந்தாயா..அது கேள்வியல்ல.
இறப்பிற்குப் பின் நீ
மனிதனாக வாழ்ந்த
வரலாறுகள் உனக்காக
காத்திருக்கின்றன.
வாழ்த்தவும் வணங்கவும்
சிலர் காத்திருக்கின்றனர்.
என்ன ஆச்சரியமா..?
வாழும்போது யாருக்கு
என்ன கொடுத்தாயோ..
வாங்கியவர்களின் நினைவில்
அது உண்டோ இல்லையோ..
ஆனால்
உனக்குத் தெரியாமல்
உன்னிடம் இருக்கிறது
மற்றவர்களுக்கான உயிர்..
நீ இறந்தபின்னென எழுது
இன்றே ஒரு உயில்
என் உடலை
தானம் செய்வதாக..!
உனக்கு என் சிரம்தாழ்ந்த
வணக்கங்கள்...!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக