02 ஏப்ரல் 2012

சுடலைமாடா..

பத்துத் தலை ராவணணைப்
பார்த்தில்லை இங்கே யாரும்..
ஒத்தத்தலை ராஜபக்ஷேவை
பாத்துக்கோடா சுடலை மாடா..

சித்தம் எல்லாம் கலங்கவொரு
காரணமா ஆசையைத்தான்
சொல்லிப்போன புத்தனையே
பாத்ததில்லை இங்கே யாரும்..

புத்தன் வழி வந்தவன்னு
சொல்லி ரத்தம் கேட்குமொரு
பித்தனாத்தான் திரியுறானே
சுடலை மாடா..

கத்தும்குயிலா திரிஞ்ச பல
குழந்தைகளை கொத்துக்குண்டு
போட்டு ஒரு குத்தம் செஞ்சான்
சுடலை மாடா..

யுத்தமெனும் நெறிகளெல்லாம்
மனிதக்குழுவுக்குள்ளே
ரத்தம் சிந்தும் போர்களுக்கே
சுடலைமாடா..

இலங்கையில் எதிர்பார்க்காதே
இது மனிதனுக்கெதிராய்
அரக்கர்கள் செய்த போரடா
சுடலைமாடா..

பிஞ்சுக்குழந்தையாய் இருந்தாலும்
அதைப்பெற்ற பெண்ணாயிருந்தாலும்
கண்ணைநோண்டி வீசுவது
மட்டுமில்லேடா சுடலைமாடா..
தீயில் சுட்டுப் பொசுக்கி
மோந்துபார்த்தாண்டா சுடலைமாடா..

எண்ணிப்பார்த்தா நெஞ்சு வெடிக்குதடா
சுடலைமாடா..இந்தக் கேடுகெட்ட
அரசியல்வாதிகளெல்லாம்
அவங்க சாவு மேலே
லாபம் பாக்குறாங்கடா சுடலைமாடா..

கண்ணிருந்தும் பாக்கமுடியாமே
காலிருந்தும் நடக்கமுடியாமே
மனசிருந்தும் செய்ய முடியாமே
தவிக்கிறோமே சுடலைமாடா..

எனக்கு ஒருநாள்,ஒரேநாள்
இந்த நாட்டுக்கு பிரதம மந்திரியாகும்
வழியொன்னும் தெரியலையேடா
சுடலைமாடா..
அதுமட்டும் நடந்துச்சுன்னா
ஒரு மணிநேரம் எனக்குப்
போதுண்டா சுடலைமாடா..

ராஜபக்ஷேன்னு ஒருத்தன்
மட்டுமில்லேடா..
அவன் வம்சம்னு எவனுமே
இருக்கமாட்டாண்டா சுடலைமாடா..!

இந்தியனாப் பொறந்துட்டேன்னு
ஆத்திரமா வருதுடா சுடலைமாடா
இன்னும் எத்தனையோ
சொல்லத்துடிக்குதடா சுடலைமாடா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக