02 ஏப்ரல் 2012

இதிலாவது நாம் நிரூபிப்போம்..!

தமிழன் என்றொரு இனமுண்டு
தனியே அவர்க்கொரு குணமுண்டு..!

உணர்வாய்த் தமிழைப் பேசிடுவார்
செயலி லென்றால் மறந்திடுவார்.
கருவில் வீரம் இருக்குதென்பார்.
உருவில் அதுவும் தெரியுதென்பார்.

இரவில் மதுவின் மயக்கத்திலே
இடையில் கொறிப்பது தமிழன்றோ..
ஈழம் ஈழம் என்றே முழங்கும்
வேழம்போலே வேசம்நாளும்

நேசம்கொண்ட மனிதரைப்போலே
நாட்கள் முழுதும் பேசுகின்றார்.
அரசியலுக்கான வழியாய் அதனை
ஆர்த்தே எங்கும் பொழிகின்றார்.

இன்னுயிர் இழந்த தமிழன் வாழ்வை
பார் முழுதும் சொல்லிப் பிதற்றுகிறார்.
பதவிகள் கிடைத்தே அமர்ந்திட்டால்
ஆரெவர் தமிழரென்றே கேட்கின்றார்..!

தமிழனென்றோ,இந்தியனென்றோ
நினைக்க மாட்டீர் நீரென்றால்
மனிதனென்றாவது நினைக்கிலையோ
தானாடாவிட்டாலும் சதையாடுதல் வழக்கமன்றோ..?

மறத்தமிழன் என்பதற்கு உதாரணமாய்
அனைத்தும் மறந்து வாழ்கின்றீரோ..?
இதுவே தமிழனின் தனிக்குணமென்று
உலகிற்கு எடுத்துக் காட்டுவீரோ.?

உலகம் முழுதும் கலகம் விளைக்கும்
பெரியண்ணன்..பெரிய போலீஸென்று
பிம்பம் பெற்றவன் அமெரிக்கன்
அவனே மனம்புழுங்குமொரு நிலை

இராஜபக்ஷே எனுமொரு இராட்ஷசன்
போர்க்குற்றவாளியென ஐநாவில் தீர்மானம்
அதனை ஆதரிக்கவேண்டுமென இந்தியாவை
ஆட்டிவைக்கவேண்டாமா நமதெழுத்துக்கள்..?

ஆங்கிலப் புலமை மிக்கோராய் நீரிருந்தால்
ஆளுக்கொரு கடிதம் மத்தியஅரசுக்கு
நீங்;கள் எழுதலாமே இ மெயிலில்
அதனைத் தடுக்க ஆருமில்லை

பாசம்மிக்க தமிழுணர்வைக் காட்டவொரு
துரும்பையாவது நீர் அசைத்தீரென
வரலாறு உங்களை நினைவு கூரட்டுமே..
வாருங்கள்,உணர்வுமிக்க தமிழெரென்று
இதிலாவது நாம் நிரூபிப்போம்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக