02 ஏப்ரல் 2012

பெண்களே..ஓ..பெண்களே..!

குனிஞ்ச தலையை நிமிருங்க
விரிஞ்ச உலகைப் பாருங்க
உலகம் உருவம் பெற்றிட
உங்க பங்கு பாதிங்க..
பெண்களே..ஓ.பெண்களே..!

சீதையென்னும் தெய்வப்பெண்ணை
கதையினிலே சொல்வாங்க..
கற்பு என்னும் ஒருகோட்டை
கவனமாகப் போடுவாங்க..!
காலமெல்லாம் பெண்குலத்தை
அடிமையாக்கி வெச்சாங்க...
சாரமில்லா மதத்தைக் காட்டி
கட்டிப்போட்டு வெச்சாங்க..! -குனிஞ்ச

முறத்தாலே புலிவிரட்டும்
தமிழ்ப்பெண்ணின் வரலாறு
படிக்கமட்டுமில்லேம்மா
பயத்தை உதறித்தள்ளம்மா..!
தாய்நாட்டு விடுதலைக்கு
வெடிகுண்டு ஏந்தின..
கல்பனாவைப் பாரம்மா..
காதல்கொள்ளு கண்ணம்மா..!-குனிஞ்ச

அண்டமெல்லாம் சுத்திப்பாக்க
அனுப்பி வெச்சான் ராக்கெட்டு
அதுலேகூட பொண்ணுகளை
ஏத்திவுட்டான் சோவியத்து.!
ஆணுக்குப் பெண்ணிங்கே
இளைப்பில்லே கண்ணம்மா..
பாடிவெச்ச பாரதியின்
வழிநீயும் நில்லம்மா..! -குனிஞ்ச

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக