படிப்படியாய் இருந்து
படிப்படியாய் உன்னை
ஏற்றும் ஏணி..!
நீ
செருப்புடன்
செருக்குடன்
விருப்புடன்
வன்மத்துடன்
கோபத்துடன்
மிதிக்கலாம்.
ஏறலாம்..
அது மட்டுமல்ல
எப்போதும் உன்னை
இறக்கியும் விடாது
நீயாய்..
இறங்கும் வரை..,
ஆனாலும்
எல்லோரையும் ஏற்றிவிடும்
ஏணிகள் எப்போதும்
தன்னிடத்தை விட்டு
மேலே ஏறுவதில்லை..!
ஏன்..?
ஏணிகள் என்றும்
ஏணிகளாகவே இருப்பதுதானே அழகு.!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக