02 ஏப்ரல் 2012

அதனால் அன்பே..,

படம் பார்த்து கவிதை சொல்
என்றாய்..!
புடம் போட்ட மனமாவென்ற
சோதனையா.?
இடம் பார்த்து உனைவென்ற
சாதனைக்கு மகிழ்வில்லை.
உன்னிடம் எனக்கெப்போதும்
தோல்வியுமில்லை.!

அழிந்துவிடும் அழகிலெனக்கு
நம்பிக்கையுமில்லை.
நலிந்துவிடும் இதனால் நமதன்பு
என்ற பயமுமுpல்லை..

உன்முகவரிகள் சுருக்கங்களென
நினைக்கவில்லை.
வாழ்க்கை அனுபவச் சுருக்கங்களின்
முகவரிகள் அதுவென்பேன்.

பிறந்தநாள் பிறக்கும்போதெல்லாம்
கடக்கிறேன் வயதையென
கவலையெதற்கு உனக்கு
அன்றெல்லாம் பதிதாய்நீ
பிறக்கிறாய் என்பேள்.

நட்பென்பது காதலைவிட
பெரிய ஆலமரம்.
அந்தக்காதலுடன் கிடைத்த
நட்பு நீ..பெரிய வரம்..!

ஊடலுடன் கூடுவது நமக்கு
வழக்கமல்ல..
கூடலற்ற ஊடல்கள் நமக்கு
புதியதுமல்ல…!
அதனால் அன்பே..,

நீயாக இருக்கும் என்னை
நிழலாக நினைக்கமாட்டாயா..?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக